தமிழ் சினிமாவில் சூப்பர் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் சமீபத்தில் இரும்புத்திரை, ஆக்சன் போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகராக வளர்ந்து வருகிறார். தமிழில் பல படங்களில் நடித்து நடிகர் விஷால் தற்போது திரைப்படத்துறையில் செயலாளராக இருக்கிறார். இவரின் நடிப்பைப் பார்த்து பல ரசிகர்கள் இவர் மீது அளவுக்கு அதிகமான அன்பை வைத்து உள்ளனர்.
தற்போது நடிகர் விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனங்களின் மூலமாக பல படங்களை தயாரித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்புக்காக ஆர்பி சவுத்ரியிடம் பத்திரங்களைக் கொடுத்து கடன் வாங்கியுள்ளார். அதன் பின்னர் நடிகர் விஷால் வாங்கிய கடனை திரும்பி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நான் கொடுத்த பத்திரங்களை இன்னும் என்னிடம் கொடுக்கவில்லை என தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மீது நடிகர் விஷால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை தற்போது தியாகராஜ நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர்கள் சோதனை செய்து வருகின்றனர். கூடிய விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி நடிகர் ஜீவாவின் அப்பா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தி திரைத் துறை வட்டாரங்களில் வேகமாக பரவி வருகிறது.
1 Comments
Lucky Club Casino Site Review and Ratings by LuckyClub
ReplyDeleteThis is a reliable website with plenty of games and bonuses, but the site does not offer many different payment methods and promotions. Read our full review here. Rating: 5 · Review by luckyclub LuckyClub
Thanks For Visiting
Emoji