தமிழில் சமீபத்தில் கனா, காபெ ரணசிங்கம், வடசென்னை, நம்ம வீட்டு பிள்ளை, சாமி 2, தர்மதுரை, காக்கா முட்டை, ரம்மி, அட்டக்கத்தி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், விஜய் சேதுபதி போன்ற பல நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் இவரின் திறமையின் மூலம் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சமீபத்தில் நடித்த காபெ ரணசிங்கம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப்படத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் கணவனின் வேதனையையும், கணவன் இல்லாமல் இருக்கும் மனைவியின் வேதனையையும் எடுத்துரைத்தது.
இந்த நிலையில் தற்போது ஒரு திரில்லர் திரை படத்தில் நடிப்பதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். ரத்திந்திரன் ஆர் பிரசாத் இந்த படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை "fashion studio", " stone bench films" ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. மேலும் இந்தப் படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடுவதாக கூறப்படுகிறது. இந்தப்படம் இயற்கை எவ்வாறு மனித குலத்திற்கு எதிராக திரும்புகிறது என்பதை சொல்லும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. முதல் முறையாக ஐஸ்வர்யா ராஜேஷ் திரில்லர் மற்றும் ஹாரர் படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
1 Comments
good
ReplyDeleteThanks For Visiting
Emoji