கோலிவுட்டில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர் விஷால் மற்றும் ஆர்யா. இவர்கள் இருவரும் தற்போது மீண்டும் இணைந்து ஒரு படம் எடுத்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக இயக்குனர் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் இவர்கள் இருவரும் நடித்திருந்தனர். மேலும் அந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் விஷாலின் மாறுபட்ட நடிப்பு அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டது. விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து முற்றிலுமாக காமெடி திரைப்படமாக வந்த அந்தப் படத்தை தொடர்ந்து, தற்போது ஒரு புதிய படத்தில் விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்துள்ளனர்.
அந்தப் படத்தில் ஆர்யா நடிக்க இருக்கும் காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிந்ததாகவும், விஷாலின் காட்சிகள் மட்டுமே இன்னும் பாக்கி இருப்பதாக கூறியுள்ளனர். மீதமிருக்கும் காட்சிகள் ஐதராபாத்தில் எடுக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசை அமைக்க உள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு எடுத்து முடித்தவுடன் இப்படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷால் மற்றும் ஆர்யா மீண்டும் இணைவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. எனவே இந்தப் படம் மிகப் பெரிய ஹிட் படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
Thanks For Visiting
Emoji